ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ரஜினி அரசியல் பிரவேசம்... தமிழிசை, பொன். ராதாவுக்கு ஒத்த கருத்தே இல்லையே!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ரஜினியின் அரசியல் பிரவேசம் என எல்லாவற்றிலும் முரண்பாடான கருத்துகளை கூறுவதையே தமிழக பாஜக தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆகியவற்றில் முரண்பாடான கருத்துகளையே தமிழிசை சௌந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் எந்த விவகாரமாக இருந்தாலும் சொல்லி வைத்தாற்போல் ஒரே கருத்துகளையே தெரிவிப்பர். வாக்கியங்கள் மாறினாலும் அதன் அர்த்தம் சுற்றி சுற்றி ஒன்றையே குறிக்கும்.

ஆனால் பாஜக மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜனும், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனும் மாறி மாறி தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே. நகரில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் வேட்பாளரான டிடிவி தினகரன் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. குறிப்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசையும் தெரிவித்தார். மேலும் மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று மனு அளித்தார்.
தேர்தலை ரத்து செய்க...
மேலும் பணப்பட்டுவாடா குறித்து தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இடைத்தேர்தலில் பண பலத்தால் மக்களை விலைக்கு வாங்க அதிமுகவின் அம்மா அணி முயற்சி செய்கிறது. பணப்பட்டுவாடா நடந்த பிறகு, தேர்தல் நடத்தினால் அது ஜனநாயக முறைபடி இருக்காது. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தேர்தலை ரத்து கூடாது
இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதால் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். எனவே தேர்தலை நடத்தியே தீர வேண்டும். அப்போதுதான் மக்களின் செல்வாக்கு யாருக்கு என்று தெரியும் என்ற தொனியில் பேசினார்.
ரஜினியுடன் கங்கை அமரன் சந்திப்பு
இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரன், நடிகர் ரஜினி காந்தை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி காந்த் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது போல் கூறினார். அதே கருத்தை தமிழிசை சௌந்தரராஜனும் தெரிவித்தார். அதாவது இடைத்தேர்தலில் ரஜினி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறார் என்றார். இதற்கு உடனே ரஜினி மறுப்பு தெரிவித்தார்.
ரசிகர்களுடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களுடனான சந்திப்பின் போது, தன்னை வைத்து அரசியல் ஆதாயம் செய்ய கட்சிகள் முயற்சிப்பதாகவும், தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த தமிழிசை, ரஜினியின் தயவால் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும், ரஜினியின் தயவு எங்களுக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
பாஜகவில் ரஜினி வந்தால்...
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினி தனி கட்சி தொடங்கினாலும், அவர் பாஜகவில் இணைந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்தார். ஒரே மாநிலம், ஒரே கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதுபோல் மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பதால் எந்த கருத்தை ஏற்பது என்று கட்சியினர் குழம்பி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications