சட்டப்படித் தான் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர்... தினகரன் கோஷ்டி சபாநாயகரிடம் விளக்கம்!
எந்த அடிப்படையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர் என்ற பதிலை சபாநாயகர் தனபாலிடம் தினகரன் தரப்பு வழக்கறிஞர், வெற்றிவேல் எம்எல்ஏ வழங்கியுள்ளனர்.
சென்னை : எந்த அடிப்படையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர் என்பதற்கான ஆவணங்கள் சபாநாயகர் தனபாலிடம் தினகரன் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.
இன்று காலை முதல் 3 முறை தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் அடுத்தடுத்து 3 முறை சபாநாயகர் தனபாலை சந்தித்தார். காலை 11 மணி முதல் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் வெற்றிவேல் மற்றும் அவருடன் வந்திருந்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

எப்போதும் ஊடகங்களிடம் எடப்பாடி அணியை வெளுத்துவாங்கும் வெற்றிவேல் இன்றைய பேட்டியின் போது அமைதியாகவே இருந்தார். வெற்றிவேல் உடன் வந்திருந்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
18 எம்எல்ஏக்கள் சார்பாக இடைக்கால பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த மாதிரியான சூழலில், கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு ஆளுநரை சந்தித்துள்ளார்கள் என்பதை ஆவணமாக கொடுத்துள்ளோம். சபாநாயர் முன் எங்களிடம் இருக்கும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம், அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை.
நாங்கள் சில ஆவணங்களை கேட்டுள்ளோம், அதை அவர்கள் கொடுத்த பின்னர் நாங்கள் அதற்கு விளக்கம் அளித்த பின்னர் கடைசியாகத் தான் நேரில் ஆஜராக வேண்டும். அதை விடுத்து நேரில் ஆஜரான பின்னர், அவர்கள் அளிக்கும் ஆவணங்களுக்கு நாங்கள் பதிலளிக்கலாம் என்பது சரியான விஷயம் கிடையாது.
சட்டத்திற்கு உட்பட்டு ஆவணங்களை அளித்த பின்னர், நேரில் அழையுங்கள் என்று சொல்லியுள்ளோம். 3 மணிக்கு எங்களை ஆஜராகச் சொன்னார்கள், நாங்கள் 3 மணிக்கு மன்பே ஆஜராகியிருக்கிறோம், அப்படி இருக்கும் போது நடவடிக்கை எடுக்கலாமா.
கர்நாடகாவில் இருக்கும் எம்எல்ஏக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர். சபாநாயகர் இன்று தான் சொல்கிறார் கடிதம் கொடுத்தால் பாதுகாப்பு அளிக்கத் தயார் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு முன்னரே நடவடிக்கை தொடங்கிவிட்டதாக நீதிமன்றத்தில் கூறுகின்றனர்.
கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ.க்கள் ஆஜராக அனுமதி கேட்டுள்ளோம். வெற்றிவேல் எம்எல்ஏவிற்கும் சேர்த்து தான் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். நியாயத்தை வெளிப்படுத்த சட்ட ரீதியாக அணுகி வருகிறோம், இறுதி முடிவை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications