அதிமுகவின் ஜனநாயக விரோத காட்டு தர்பாரை வன்மையாக கண்டிக்கிறோம்: தா. பாண்டியன்
சென்னை: அதிமுகவின் ஜனநாயக விரோத காட்டு தர்பாரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை உள்ளாட்சி அமைப்புகளின் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தலை செப்டம்பர் 18ந் தேதி நடத்திட தமிழக தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் அறிவிப்பு செய்தது. இந்த அவசர அறிவிப்பால் எதிர்க் கட்சிகளின் போட்டியிடுவதற்கான போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

போதுமான கால அவகசமின்றி இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தலில் எதிர்க்கொள்வதென முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் வேட்பு மனுத் தாக்கல் பல இடங்களில் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற வேண்டும் என்ற தீயநோக்கத்தோடு வியாழக்கிழமை மனுதாக்கல் செய்ய சென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிரையும் மற்றும் பாஜக கட்சியிரையும் போட்டியிட மனுத் தாக்கல் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அதிமுகவினரின் இந்த ஜனநாயக விரோதச் செயலை தமிழக காவல்துறையின் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் கைகட்டி வாய்பொத்தி மௌனமாக இருந்துள்ளனர். அதிமுகவின் இத்தகைய ஜனநாயக விரோத காட்டு தர்பாரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்வதை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்திய அதிமுகவினர் மீதும் இதற்கு துணைநின்ற காவல்துறையினர் மீதும் தேர்தல் அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருக்கான தேர்தலை ரத்து செய்து வாய்ப்புள்ளோர் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புதிதாக தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டும். போட்டியிட வாய்ப்புள்ளோர் மனுத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பும் சுகந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கான உரிய ஏற்பாடுகளையும் செய்திட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications