தைப்பூசம்: ஆழ்வார்குறிச்சி சிவசைலபதி பரமகல்யாணி ஆலயத்தில் தெப்பத்திருவிழா
ஆழ்வார்குறிச்சியில் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாளுக்கு 24ம் ஆண்டு தைப்பூச தெப்ப உற்சவம் நடந்தது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாளுக்கு 24ம் ஆண்டு தைப்பூச தெப்ப உற்சவம் நடந்தது.
சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் உள்ளது. இங்குள்ள சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆழ்வார்குறிச்சியில் தைப்பூச திருநாளன்று தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு சிவசைலத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி திருக்குளம் விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினர்.
தொடர்ந்து நேற்று காலை தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சுவாமி அம்பாள் எழுந்தருளினர். அங்கு பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தைப்பூச நாளன்று சந்திர கிரஹணம் ஏற்படுவதால் அதன் முதல் நாளே தெப்ப உற்சவம் நடைபெற்றது.

தைப்பூச தெப்பத்திருவிழா
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தைபூச தெப்பத்திருவிழா நடைபெற்றது 10 நாட்கள் திருவிழாவில் தினமும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , வீதி உலா, மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப திருவிழா நடைபெற்றது.

பக்தர்கள் பங்கேற்பு
தெப்பத்தை 11 முறை வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராமானோர் கலந்து கொண்டனர்
ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியார் செய்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த இறைவன், இறைவியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி
ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், சிவசைலம், கடையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதையடுத்து இன்று ரிஷப வாகனத்தில் சிவசைலம் திருக்கோயிலுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.

அலங்கார தெப்ப உற்சவம்
வாணவேடிக்கையுடன் திருக்குளம் வீதிஉலா வந்து பெரியதளவாய் மாடசுவாமிக்கு காட்சியளித்தல் நடக்கிறது. 31ம்தேதி அதிகாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா, அதனை தொடர்ந்து தர்மபுரம் ஆதீனமடத்தில் 2 சிவாச்சாரியார்கள் வைதீக கோலத்துடன் ரெட்டை சோடசோப தீபாராதனை நடைபெற்றது.

அபிஷேகம் தீபாராதனை
இதனைத் தொடர்ந்து ருத்ர ஹோமம், ருத்ர ஏகாதசி, அபிஷேகம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளினார். கோயில் சென்றதும் பின்னர் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications