சென்னையில் மின்சாரம் இல்லாத பகுதிகளில் எப்போது நிலைமை சரியாகும்? அமைச்சர் தங்கமணி பதில்
1541 வழித்தடங்களில் 128 வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மாலைக்குள் மின் சேவை சரி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தொடர் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் நகரமே இருளில் மூழ்கியது. மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அவசர தேவைக்கு மின்சாரம் இன்றி தவிக்கிறார்கள்.

இதுகுறித்து அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, 1541 வழித்தடங்களில் 128 வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக வெள்ளம் அகற்றப்பட்டு இன்று மாலைக்குள் மின் இணைப்பு திரும்ப வழங்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications