4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிறுவன் உட்பட 3 பேர் அதிரடி கைது!
நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை: நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே உள் அகரகீரங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தையை அருகில் உள்ள பாத்ரூமிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார்.

இதனை அவ்வழியே சென்ற பெண் ஒருவர் பார்த்து விட்டு அருகில் உள்ளவர்களை அழைத்து விக்னேசை மடக்கி பிடித்தனர். சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாருக்கு இதுபற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராணி, விக்னேசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விக்னேஷ் போலீசாரிடம் நான் மட்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரவில்லை. இதே பகுதியை சேர்ந்த கரூரில் படித்து வரும் வேல்கண்ணன் மற்றும் மற்றொரு சிறுவன் ஒருவன் ஆகியோரும் சிறுமியிடம் இதேபோல் நடந்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.
இவர்கள் 3 பேரும் கடந்த 3 மாதமாக சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் விக்னேஷ், வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் விக்னேஷ் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். வேல்முருகனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 வயது சிறுமிக்கு 3 மாதமாக 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications