சபாஷ் மக்களே.. கருணாஸை வெல்ல வைத்து திருமாவளவனை வீழ்த்தி விட்டீர்களே!
சென்னை: தமிழக மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமாவளவனை தோற்கடித்துள்ளனர். நடிகர் கருணாஸை வெல்ல விட்டுள்ளனர்.
மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமா தோற்றுப் போயுள்ளார். சற்றே பரவாயில்லை என்ற அளவிலான வாக்கு வித்தியாசத்தில் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

கருணாஸ் திருவாடானை தொகுதியில் வென்றுள்ளார். திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் தோற்றுள்ளார்.
கருணாஸ் மக்களுக்கு அப்படி என்ன செய்து விட்டார் என்று தெரியவில்லை. திருமாவளவன் மக்களுக்கு என்ன செய்யத் தவறினார் என்பதும் புரியவில்லை.
அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக கருணாஸ் வென்றுள்ளார். அதிமுக, திமுக, பண பலம் இல்லாமல் முயன்றவரை போராடிய ஒரே காரணத்திற்காக திருமா தோற்றுள்ளார்.
மிக மிக விசித்திரமாகத்தான் இருக்கிறது மக்களின் தீர்ப்பு... சபாஷ் மக்களே!












Click it and Unblock the Notifications