என் சீட்ல உட்காரும்மா.. குணம் அடைந்து திரும்பிய டானியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியாவை வியாழக்கிழமை அன்று தனது இருக்கையில் அமர வைத்து அழகுபார்த்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சவுபாக்கியா தம்பதியின் மூத்த மகள் டானியா. இவருக்கு 9 வயதாகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்
மூன்றரை வயதுக்கு பிறகு அவரது முகத்தில் வந்த ஒரு கட்டி அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவருக்கு முகச்சிதைவு நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாளுக்கு நாள் டானியாவின் முகம் ஒரு பக்கம் சிதையத் தொடங்கியது

சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றோருக்கு போதுமான பணவசதி இல்லை. இந்த நிலையில்தான் சிறுமி டானியா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது சிகிச்சை உதவ வேண்டும் என்றும் தான் பள்ளிக்கு சென்றாலும் அங்கு ஆசிரியர் தன்னை தனியாக உட்கார வைப்பதாகவும் குழந்தைகள் யாரும் தன்னுடன் விளையாட வருவதில்லை என்றும் அதனால் தான் பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டதாகவும் டானியா வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவில் முதல்வர் தனது அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்போது அமைச்சராக இருந்த ஆவடி எஸ்.எம்.நாசருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை சிறுமியின் வீட்டுக்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன்படி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 கட்ட அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பினார். இச்சூழலில், டானியாவின் குடும்ப சூழ்நிலையை கருதி மருத்துவ செலவுக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தன் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை நேற்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டானியாவின் தாயாரிடம் கொடுத்தார்.
அப்போது, டானியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆட்சியர் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். சிறுமியின் விருப்பத்துக்கு இணங்க தன் இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்தார். இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications