தூத்துக்குடி துறைமுகத்தில் 2 போர்க் கப்பல்கள்... பயிற்சிக்காக வருகை.. மக்கள் பார்வையிட தடை!
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ள இரண்டு பயிற்சி போர்க்கப்பல்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும், ரோந்து பணி பயிற்சியிலும் ஐஎன்எஸ்டிர், தரங்கினி, சுதர்ஷினி, சுஜாதா, கர்டூல், வர்ணா ஆகியவை கூட்டு ரோந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இரு கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்து சென்றன.

இந்நிலையில், தற்போது டிர் மற்றும் வருண் ஆகிய இரு போர்க்கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன. இதில் ஐஎன்எஸ் டிர் கப்பல் 1986 முதல் கடற்படையில் இணைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 3200 டன் எடையும், 105 மீ்ட்டர் நிளமும், 4 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது.
இந்த கப்பல் மணிக்கு 16 கடல் மைல் தொலைவு வேகத்திற்கு பயணிக்க கூடியது. இதில் 20 அதிகாரிகளும், 120 வீரர்களும் பணியில் உள்ளனர். இந்த கப்பலில் துருவ், சேதக் ஆகிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு போர் ரக பீரங்கிகளும், ப்ளேர் எனப்படும் ராக்கெட் லாஞ்சர், நான்கு சுழலும் இயந்திர துப்பாக்கிகளும் கொண்டது. ரேடார் உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகளும் இதில் உள்ளது.
இதே கப்பலை போன்று வருண் 1998ல் கப்பல்படையில் சேர்க்கப்பட்டது. வெள்ளி விழா ஆண்டை நோக்கி பயணித்து வரும் இந்த போர் கப்பல் 1180 எடையும், 74.10 மீட்டர் நீளமும் கொண்டது. 3.2 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. 30 இன்ச் சிறிய பிரங்கிகள், 2 இயந்திர துப்பாக்கிகள், ரேடார் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்களை கொண்டது.
இதன் பின் பகுதியில் சேதக் இலகு ரக ஹெலிகாப்டர் இறங்கும் வசதி உள்ளது. இந்த இரு கப்பல்களும் கொச்சியில் இருந்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாகவும், எரிபொருள் நிரப்பும் தேவைக்காகவும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன. இன்று மாலை இரு கப்பல்களும் புறப்பட்டு சென்னை வழியாக விசாகப்பட்டிணம் புறப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications