தூத்துக்குடி துறைமுகத்தில் 2 போர்க் கப்பல்கள்... பயிற்சிக்காக வருகை.. மக்கள் பார்வையிட தடை!
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ள இரண்டு பயிற்சி போர்க்கப்பல்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும், ரோந்து பணி பயிற்சியிலும் ஐஎன்எஸ்டிர், தரங்கினி, சுதர்ஷினி, சுஜாதா, கர்டூல், வர்ணா ஆகியவை கூட்டு ரோந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இரு கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்து சென்றன.

இந்நிலையில், தற்போது டிர் மற்றும் வருண் ஆகிய இரு போர்க்கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன. இதில் ஐஎன்எஸ் டிர் கப்பல் 1986 முதல் கடற்படையில் இணைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 3200 டன் எடையும், 105 மீ்ட்டர் நிளமும், 4 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது.
இந்த கப்பல் மணிக்கு 16 கடல் மைல் தொலைவு வேகத்திற்கு பயணிக்க கூடியது. இதில் 20 அதிகாரிகளும், 120 வீரர்களும் பணியில் உள்ளனர். இந்த கப்பலில் துருவ், சேதக் ஆகிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு போர் ரக பீரங்கிகளும், ப்ளேர் எனப்படும் ராக்கெட் லாஞ்சர், நான்கு சுழலும் இயந்திர துப்பாக்கிகளும் கொண்டது. ரேடார் உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகளும் இதில் உள்ளது.
இதே கப்பலை போன்று வருண் 1998ல் கப்பல்படையில் சேர்க்கப்பட்டது. வெள்ளி விழா ஆண்டை நோக்கி பயணித்து வரும் இந்த போர் கப்பல் 1180 எடையும், 74.10 மீட்டர் நீளமும் கொண்டது. 3.2 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. 30 இன்ச் சிறிய பிரங்கிகள், 2 இயந்திர துப்பாக்கிகள், ரேடார் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்களை கொண்டது.
இதன் பின் பகுதியில் சேதக் இலகு ரக ஹெலிகாப்டர் இறங்கும் வசதி உள்ளது. இந்த இரு கப்பல்களும் கொச்சியில் இருந்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாகவும், எரிபொருள் நிரப்பும் தேவைக்காகவும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன. இன்று மாலை இரு கப்பல்களும் புறப்பட்டு சென்னை வழியாக விசாகப்பட்டிணம் புறப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications