ஆர்.கே.நகரில் ஜெ.வை "போட்டியின்றி" தேர்வு செய்ய வேண்டும்: த.மா.கா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி. அதிரடி!
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இடைத்தேர்தல்களில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சில உயர்ந்த மரபுகளை பின்பற்றுவதே முறையாக இருக்கும்.
1981-ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வால்மீ வெற்றி பெற்றிருந்த அந்த தொகுதியை எம்.ஜி.ஆர். காங்கிரசுக்கே விட்டுக்கொடுத்தார். தனி அழைப்பு விடாத நிலையிலும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரமும் செய்தார்.
அதேபோல் ஆர்.கே.நகரில் ஒரு உயரிய மரபை ஏற்படுத்தும் வகையில் யாரும் போட்டியிடாமல் போட்டியின்றி தமிழக முதல்வரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்வதே விவேகம்.
இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கின்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது அரசியல் அரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications