தட்ஸ் தமிழ் ஜோதிடர் கே.ஆர். சுப்ரமணியனுக்கு டி.எம்.எஸ் விருது
மதுரை: தென்கொரியாவில் நடைபெற்ற பன்னாட்டு ஜோதிடவியல் கருத்தரங்கத்தில் பங்கேற்று ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து உரையாற்றிய நமது தட்ஸ் தமிழ் ஜோதிட பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் அவர்களுக்கு டி.எம்.எஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மதுரையில் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் ரசிகர் மன்றம் சார்பில், விருது வழங்கும் விழா மற்றும் பட்டிமன்றம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.சிவராம் தலைமை வகித்தார். மன்ற தலைவர் பாலன் வரவேற்றார். பல துறைகளில் திறம்பட செயல்படும் 12 பேருக்கு டி.எம்.எஸ்., விருதுகள் வழங்கப்பட்டன.

நமது ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணையதளத்தின் ஜோதிடர் பேராசிரியர் திரு.கே.ஆர்.சுப்ரமணியன் அவர்களுக்கு டி.எம்.எஸ் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்த சாதனைகளை விழா மேடையில் வாசித்தனர்.
தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஜோதிடவியலில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றது. ஜோதிடவியலை சுமார் 30 வருடமாக கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பது. தமிழ்நாடு முழுவதும் ஜோதிட பயிற்சி மையங்களை நிறுவி ஆயிரக்கணக்கான தொழில்முறை ஜோதிடர்களையும் நூற்றுக்கணக்கான ஜோதிட ஆசிரியர்களையும் உருவாக்கிக் கொண்டிருப்பது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஜோதிடவியல் படிப்புகளுக்காக பாடத்திட்டத்தை சீரமைத்து நான்கு பாடப்புத்தகங்களை வடிவமைத்து எழுதியது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஜோதிடவியல் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியல் படிப்புகளை துவக்கியது. ஜோதிடவியலில் முதுகலை பட்டப்படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, உயர் பட்டயபடிப்பு, பட்டயபடிப்பு சான்றிதழ் படிப்புகளை துவக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது. ஜோதிடவியல் படிப்புகளுக்காக பாடத்திட்டம் வடிவமைத்து உலகத் தரம் வாய்ந்த முப்பது ஜோதிட பாடப்புத்தகங்களை எழுதியிருப்பது. ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணைய தளத்தில் ஜோதிட கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பது, வாஸ்து சாஸ்திரம் தொடர்பாக தென்கொரியாவில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் இந்திய ஜோதிடவியல் சரித்திரத்திலேயே முதன் முறையாக இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு ஆய்வு கட்டுரை சமர்பித்து சிறப்புரையாற்றி இந்தியாவின் வேத விஞ்ஞான பெருமையை உலகிற்க்கு பறைசாற்றியது உள்ளிட்ட பல சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் டி.எம்.எஸ்., மகன் டி.எம்.எஸ்.செல்வக்குமார், பேராசிரியர் மோகன் பேசினர். ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழக தலைவர் அனகன்பாபு பட்டிமன்றத்தை துவக்கி வைத்தார். பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் தலைமையில் மகேஸ்வரி, திருநாவுக்கரசு, பாண்டியராஜன், ரேணுகாதேவி பேசினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications