ரியல் எஸ்டேட்காரர்கள் காட்டில் மழை தான்.. குறைகிறது பத்திரப்பதிவு நில வழிகாட்டு மதிப்பு!
பத்திரப்பதிவுக்கான நில வழிகாட்டு மதிப்பை 33 சதவீதம் குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் நில பத்திரப்பதிவு மூலம் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் 33 சதவீதம் வழிகாட்டு மதிப்பை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிலத்தின் மீதான வழிகாட்டு மதிப்பை 33 சதவீதம் வரை குறைக்க அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நில வழிகாட்டு மதிப்பு கூடுதலாக இருந்ததால் பத்திரப்பதிவு செய்வதில் குறைபாடு ஏற்பட்டது.

குறிப்பாக 2012-13 நிதியாண்டில் 7ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் 2016- 17ம் ஆண்டில் வெறும் ஏழாயிரம் கோடி ரூபாய் மட்டுமே பத்திரப்பதிவு நடந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 -16ல் 25.28 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்ட 20.27 லட்சம் பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
சரியான நில வழிக்காட்டு மதிப்பு இல்லாத காரணத்தால் சராசரியாக சுமார் ஆயிரத்து 500 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது. எனவே வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் நில வழிகாட்டு மதிப்பை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை இதற்கான ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பின்னர் அது அறிவிப்பாக வெளியிடப்படும். அரசின் இந்த முடிவால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விடிவு காலம் ஏற்படும் என்பதோடு சாமான்யர்களும் நிலம் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் துறை வாரியாக வெளியிடப்பட உள்ள அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றது முதல் நடைபெறும் 5வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா











Click it and Unblock the Notifications