பெங்களூர் அம்ருதா யார்... தமிழக அரசு விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தகவல்
பெங்களூர் அம்ருதா யார் என்பது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
சென்னை: பெங்களூர் அம்ருதா யார் என்பது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த விசாரணை பிப்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பவர் ஜெயலலிதாவுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருத்தா வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் சோபன் பாபுவை தந்தை என்று கோராதது ஏன் என்றும் அவர் கேட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூர் அம்ருதா யார் என்பது குறித்து விசாரித்து வருவதாக தமிழக அரசு தலைைம வழக்கறிஞர், நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும் அம்ருதா வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் காலஅவகாசம் கோரினார். அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில் அம்ருதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து பிப்ரவரி 3-ஆம் தேதி இந்த கோர்ட் முடிவு செய்யும்.
தமிழக அரசு, தீபா, தீபக் ஆகிய மூவரும் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications