பெங்களூர் அம்ருதா யார்... தமிழக அரசு விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தகவல்
பெங்களூர் அம்ருதா யார் என்பது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
சென்னை: பெங்களூர் அம்ருதா யார் என்பது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த விசாரணை பிப்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பவர் ஜெயலலிதாவுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருத்தா வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் சோபன் பாபுவை தந்தை என்று கோராதது ஏன் என்றும் அவர் கேட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூர் அம்ருதா யார் என்பது குறித்து விசாரித்து வருவதாக தமிழக அரசு தலைைம வழக்கறிஞர், நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும் அம்ருதா வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் காலஅவகாசம் கோரினார். அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில் அம்ருதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து பிப்ரவரி 3-ஆம் தேதி இந்த கோர்ட் முடிவு செய்யும்.
தமிழக அரசு, தீபா, தீபக் ஆகிய மூவரும் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications