20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு
20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சென்னை: 20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. 20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது,
நாகராஜன், தரேஸ் அகமது, ஆஷிஷ் குமார், பாலாஜி, சம்பத் , மகேஸ்வரன், மகேஸ்வரி , அமுதவல்லி, மதிவாணன், பழனிச்சாமி, ஜெயகாந்தன், பாஸ்கரன், லில்லி, சாந்தா, கருணாகரண், நடராஜன், ராஜாராமன், செல்வராஜ், கே நாகராஜ் , சுப்ரமணியன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தற்போது புதிதாக செந்தில் வேலன், அவினாஷ் குமார், அஸ்ராக் கார்க், செந்தில் குமாரி, பாபு, துரை குமார், மகேஸ்வரி, ராதிகா,லலிதா, லட்சுமி, ஜெயா கவுரி, காமினி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.