மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கான கொள்முதல் கட்டணம் உயருகிறது- குஷியோ குஷியில் ‘கோட்டை’
டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானங்களை கொள்முதல் செய்யும் கட்டணத்தையும் உயர்த்துகிறது தமிழக அரசு.
சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானங்களை கொள்முதல் செய்யும் கட்டணத்தையும் உயர்த்துகிறது தமிழக அரசு. இந்த விலை உயர்வால் கோட்டை வட்டாரத்தினர் ரொம்பவே குஷியாக இருக்கிறார்களாம்.
தமிழக அரசு அண்மையில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை கடுமையாக உயர்த்தியது. அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரித்ததால் செலவை ஈடுகட்டும் வகையில்தான் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வால் அரசு கஜானா நிரம்பும்; கூடுதல் விலைக்கு விற்பதால் டாஸ்மாக் தொடர்புடையோரும் ஆதாயம் அடைகின்றனர்.

கொள்ளை லாபம்
ஆனால் ஆட்சியாளர்களுக்கு வருவாய் என்பது மதுபான நிறுவனங்களிடம் இருந்து வரும் கணிசமான கப்பம்தான். மதுபான நிறுவனங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே கொள்ளை லாபம் சம்பாத்தித்துதான் வருகின்றன.

ஐடியா தந்த நிறுவனங்கள்
தற்போது அனைத்து மதுபானங்களுக்குமே ஜிஎஸ்டி வரியும்விதிக்கப்படலாம் என்பதால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவியுங்கள்.. உங்களுக்கான தொகையை அதில் இருந்து கணிசமாக எடுத்துக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளன மதுபான தயாரிப்பு நிறுவனங்கள்.

விரைவில் அறிவிப்பு
இதையேற்று ஆட்சியாளர்களும் கூடி விவாதித்திருக்கின்றனர். கடைசியாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

கஜானா பணம் கல்லாபெட்டியில்
அதாவது ஒரு குவார்ட்டர் பிராந்தி அல்லது விஸ்கி தயாரிப்புக்கு மதுபான நிறுவனங்களுக்கான செலவு என்பது அதிகபட்சம் ரூ15 வரைதானாம். ஆனால் ஏற்கனவே தமிழக அரசு இரு மடங்கு விலை கொடுத்து வாங்கி அதற்கு மேல் இரு மடங்கு விலை வைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்கிறது. தற்போது கொள்முதல் விலையை ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ15 என உயர்த்தினால் ரூ5 மதுபான நிறுவனங்களுக்கும் ரூ10 ஆட்சியாளர்களுக்கு என பங்கு போகுமாம். அதாவது நமது கஜானாவில் உள்ள பணத்தை மதுபான நிறுவனங்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து ஆட்சியாளர்களின் கல்லாபெட்டிகள் நிரம்பப் போகின்றன. இதனால் கோட்டை வட்டாரத்தினர் ரொம்பவே குஷியில் இருக்கிறார்களாம்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications