தலித் இளைஞர் சங்கர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5.62 லட்சம் நிதியுதவி
உடுமலைப்பைட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5.62 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பொறியியல் படித்துள்ள அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டார்.

இந்தத் திருமணத்திற்கு கவுசல்யாவின் வீட்டார் சம்மதிக்கவில்லை. கடுமையாக எதிர்த்துள்ளனர். அதையும் மீறி திருமணம் செய்து கொண்டனர் சங்கர் - கவுசல்யா. இதையடுத்து இருவரையும் பிரிக்க கவுசல்யா வீட்டுத் தரப்பு தொடர்ந்து முயன்று வந்தது. தற்போது அது வெறித்தனமான கொலையில் போய் முடிந்துள்ளது.
உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் பலர் பார்க்க சங்கரை கொடூரமாகக் கொலை செய்து தப்பிச் சென்றது 3 பேர் கொண்ட கொலைக் கும்பல். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரின் உடல் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சங்கரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் சாதனைக்குரல், சங்கரின் தந்தை வேலுச்சாமியை நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து நேரில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.
அப்போது கவுசல்யாவின் உயிரைக் காக்க தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கோட்டாட்சியரிடம் வேலுச்சாமி கேட்டுக் கொண்டார். மேலும் தனது மகனை இழந்து விட்டதால் தனது குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications