வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மழை பெய்யுமாம்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அண்மையில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அது வியாழக்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

வரும் நாட்களில் அது மேலும் வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு இரவில் உறைபனி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் முதல்வாரத்தில் இருந்து இதுவரை பல காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. மாதி புயலும் உருவானது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்திற்கு சரியான அளவிற்கு கிடைக்கவில்லை. கடந்த 15 நாட்களாகவே பனி கொட்டத் தொடங்கிவிட்டதால் நீராதாரமும் குறைந்து வருகிறது. இனியாவது மழை பெய்யுமா? என்று ஏங்கத் தொடங்கியுள்ளனர் சென்னைவாசிகள்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications