பட்டாசுக்கு 28% வரி கூடாது.. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிரச்சினை கிளப்புவோம்: ஜெயக்குமார்
சென்னை: ஜிஎஸ்டி வரி பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் ஜெயக்குமார். அப்போது அவரிடம் பட்டாசு தொழிலாளர்கள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 10 லட்சம் பேர் பட்டாசு தொழிலை நம்பியுள்ளனர். பட்டாசுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் பட்டாசு தொழில் பாதிக்கப்படும்.
இது அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும். இதுகுறித்து மத்திய அரசுக்கு நாங்கள் ஏற்கனவே அழுத்தம் கொடுத்தோம். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதுபற்றி கூறுகையில், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகும் அளவுக்கு நியாயமான காரணத்தை கூறினால், அதுகுறித்து பரிசீலனை செய்வோம் என தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பது முடிந்த கதையல்ல. கவுன்சிலின் தலைவராக உள்ளவர் நிதி அமைச்சர். ஒவ்வொரு மாதமும் முதல், சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் கூடும். அப்போது மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறினால், அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும். எனவே எந்த மக்களும் பாதிப்படைய மாட்டார்கள். அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும். அப்போது, விருதுநகர் மாவட்ட, பட்டாசு பிரச்சினையை கிளப்புவோம். தீபாவளி வரைகூட காத்திருக்க தேவையில்லை. இவ்வாறு நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications