டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவடைந்தது... அரசுப் பணி கனவுடன் 20 லட்சம் பேர் தேர்வு முடிவுக்காக வெயிட்டிங்!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் 6,962 மையங்களில் தொடங்கின.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 10 மணி தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. முதல் முறையாக 20 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4, குரூப் 1, குரூப் 2 , விஏஓ, இந்து அறநிலையத் துறை பணி ஆகியவற்றுக்கான தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்கிறது. அந்த வகையில் குரூப் 4 பதவியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுத 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தகுதி பெற்றனர். இந்தத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 3 மணி நேரம் நடைபெற்ற தேர்வு மதியம் 1 மணிக்கு முடிந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 6,962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
அனைத்து தேர்வுக் கூடங்களும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வில் எத்தனை கேள்விகளுக்கு தேர்வர் பதில் அளிக்கவில்லை என்றால் அதை கணக்கிட்டு குறிப்பிடும் தனி கட்டம் விடைத்தாளில் அறிமுகப்படுத்தப்பட்டது. கைபேசி, கால்குலேட்டர் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை.
முதல்முறையாக தேர்வரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் விடைத்தாளில் அச்சிடப்பட்டது. சென்னையில் மட்டும் 608 மையங்களில் 1.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்ததை அடுத்து இந்த தேர்வில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வினாத் தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications