பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு... பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கடும் பாய்ச்சல்
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வதாக தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருப்பதாகவும் பொறியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அவர்கள் கூறியுள்ளர்

இதுகுறித்து ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளரும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான வி முத்துவிஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால் மத்திய அரசு தனது கடமையிலிருந்து தவறி விட்டது. கர்நாடக அரசுக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு விரோதமாகவும் அது நடந்து கொண்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்றது. அதற்கு அவசியமே இல்லை. நர்மதா அணை கட்டுப்பாட்டு வாரியம், கிருஷ்ணா கோதாவரி மேலாண்மை வாரியம் ஆகியவை நாடாளுமன்ற அனுமதி இல்லாமல்தான் அமைக்கப்பட்டன.
இந்த வாரியங்கள் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. அனுமதியும் பெறப்படவில்லை. சட்டப்படி அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மட்டும் மத்திய அரசு பாரபட்சமாக நடப்பது ஏன் என்று புரியவில்லை.
கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளையும், அணைகளையும் பார்வையிட்ட மத்திய நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை மிக மிக பொதுப்படையாக உள்ளது. இது தமிழகத்திற்கு எந்தப் பலனையும் தராது என்றார் முத்து விஜயன்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications