மோடி வருகை எதிரொலி... விமான நிலையம் டூ அடையாறு வரை திசை திருப்பப்பட்ட வாகன போக்குவரத்து!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் எதிரொலியாக சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : காவிரி வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு எதிராக கருப்புகொடி காட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்கள், உணர்வாளர்கள் என்று அரசியல் கட்சி என்ற எல்லைகளைக் கடந்து ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ கண்காட்சி தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால் காவிரி வாரிய விவகாரத்தில் இழுத்தடிப்பு செய்து தமிழகத்திற்கு வஞ்சனை செய்து வரும் அவரது தலைமையிலான மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்த முடிவின்படி சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை பதிவு செய்ய ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இதனால் பிரதமரின் பெரும்பாலான பயணம் வான்வழியாகவே திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் பிற்பகலில் சென்னை அடையாறு புற்றுநோய் மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்கள் சின்னமலை வழியாக நந்தனம் சந்திப்பிற்கு சென்று திருவிக பாலம் வழியாக அடையாறு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடையாறில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் வழியாக எஸ்ஆர்பி டூல்ஸ் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அடையாறு செல்ல வேண்டிய வாகனங்கள் சேமியர்ஸ் வழியாகவும், விமான நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள் நந்தனம் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications