அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட தினகரனுக்கு அதிகாரமில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் பொளேர்!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமை நிலைய செயலாளர்தான் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டலாம் என்றும் அவ்ர கூறியுள்ளார்.
சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து நீக்குவதாக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் தெரிவித்தனர். டிடிவி.தினகரனால் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் சசிகலா குடும்பத்தின் தலையீடு எள்ளளவும் இருக்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கட்சியில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கூட்டம்
இன்று மாலை எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என டிடிவி.தினகரன் தரப்பு அறிவித்துள்ளது.

எந்த அதிகாரமும் இல்லை
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை தலைமை நிலைய செயலாளர்தான் கூட்டலாம் என அவர் கூறியுள்ளார்.

கூட்டத்தை கூட்ட முடியாது
கட்சியில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு நபர் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட முடியாது என்றும் அவர் கூறினார். டிடிவி தினகரனுக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று மாலை நடைபெறும் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவருக்கான ஆதரவு மக்கள் மத்தியில் எப்படி உள்ளது என தெரியவரும்.

என்ன முடிவை அறிப்பார்?
அதேநேரத்தில கட்சியிலிருந்து ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டத்தின் முடிவில் டிடிவி.தினகரன் என்ன மாதிரியான முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications