தூத்துக்குடி: திடீர் ரெய்டு படாதபாடு படும் டாஸ்மாக் ஊழியர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக்கில் தொடர்ந்து முறைகேடு நடந்து வருவதால் 34 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திடீர் திடீர் என விஜிலென்ஸ் சோதனை நடப்பதால் ஊழியர்கள் கிலி அடித்து கிடக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலத்தின் கீழ் 197 டாஸ்மாக் கடைகளும், 160க்கும் மேற்பட்ட பார்களும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்ததால் உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழுவை அமைத்தனர்.
இந்த குழுவினர் தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள குடோனிலும் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் பல நூதன முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் கலாவதியான மதுபாட்டில்களை மீண்டும் மீண்டும் பல டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைத்து முறைகேடு செய்ததன் மூலம் ரூ.4.93 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து அறிக்கையை சென்னைக்கு அனுப்பினர். முறைகேட்டில் ஈடுபட்ட மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் முதலில் 4 பேரும், பிறகு 9 டாஸ்மாக் ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அடுத்த கட்டமாக ஒரே நாளில் தூத்துக்குடி டாஸ்மாக்கில் பணியாற்றி வந்த 18 பேர் சஸ்பெண்ட் ஆனார்கள்.
கடந்த மூன்று மாத காலத்தில் இதுவரை 34 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்தப்பட இருப்பதால் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்த சஸ்பெண்ட் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகமே கலகலத்து போய் கிடக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications