தனியார் பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. 2 பெண்கள் அதிரடி கைது
தனியார் பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தப்பட்டதாக 2 பெண்கள் நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினத்தில் பல்வேறு வழிகளில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு அனைத்து செக்போஸ்டுகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

இது போல் சீர்காழி மதுவிலக்கு போலீசார் நந்தலாறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் வந்த இரண்டு பெண்களின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், 160 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த 2 பெண்களிடம் இருந்து மதுபாட்டில்கள் உடடினயாக பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரைக்கால் திருநகரியை சேர்ந்த சூரணா மற்றும் மைனர் வயது இளம் பெண் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications