போர்க்களமான அலங்காநல்லூர்.. காளைகள் சிறைபிடிப்பு.. மறக்க முடியாத 2017 Flashback
Subscribe to Oneindia Tamil
சென்னை: அலங்காநல்லூர் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. சீறிப் பாயும் காளைகளை இளைஞர்கள் எழுச்சியுடன் அடக்கி பரிசுகளைத் தட்டிச் சென்று வருகின்றனர். ஆனால் கடந்த வருடம் அங்கு எப்படிப்பட்ட நிலை இருந்தது. மறக்க முடியுமா 2017ம் ஆண்டை!
உச்சநீதிமன்ற தடையால் அலங்காநல்லூரில் 3-வது ஆண்டாக கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கோயில் காளைகளுக்கு பூஜைகள் மட்டும் நடத்த போலீசார் அனுமதித்தனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் எழுச்சியுடன் போராட்டங்களில் குதித்தனர். அலங்காநல்லூரில் இளைஞர்கள், பெண்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என சகல தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம்தான் பின்னர் விஸ்வரூபம் எடுத்து மெரீனா புரட்சிக்கு வித்திட்டது.
கடந்த ஆண்டு அலங்காநல்லூர் கண்ட போர்க்கள காட்சிகளின் பிளாஷ்பேக் உங்களுக்காக.












Click it and Unblock the Notifications