பணத்திற்கு ஆசைப்பட்டு விட்டேன்.. வி.சேகர் வாக்குமூலம்
சென்னை: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் என்னைத் தவறு செய்ய தூண்டி விட்டு விட்டது என்று இயக்குநர் வி.சேகர் கூறியுள்ளார்.
சிலைத் திருட்டு வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார் வி.சேகர். பல அருமையான குடும்பப் படங்களை எடுத்துப் பிரபலமடைந்தவரான இவரது கைது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேகரா இப்படி என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டது ஏன் என்பது குறித்து போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார் வி.சேகர். அதில் அவர் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்:

வருமானம் இல்லை
குடும்பப் படங்களை எடுத்தவன் நான். அதை கொள்கையாகவே வைத்திருந்தேன். ஆனால் சமீப காலமாக எனக்கு போதிய வருமானம் இல்லை. மகனை வைத்து எடுத்து வரும் படத்தையும் முடிக்க முடியாமல் தவித்தேன்.

பண ஆசையில் தடுமாற்றம்
இந்த நிலையில்தான் கோவில் சிலை திருட்டுக் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. சினிமாவில் உள்ள சிலர் மூலமே இந்தத் தொடர்பு ஏற்பட்டது. கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பாதை தவறி விட்டேன்.

8 சிலைகள்
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 8 சிலைகளும், பல்வேறு கோவில்களில் திருடப்பட்டவையாகும். எனது வீட்டில்தான் சில மாதங்களாக இவற்றை வைத்திருந்தேன். வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டு வந்தோம். அதற்குள் மாட்டி விட்டோம் என்று கூறியுள்ளாராம் சேகர்.

புரோக்கர்கள் கூட்டம்
இந்த சிலை கடத்தும் கும்பல் பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டுள்ளது. அடிக்கடி இதுதொடர்பான புரோக்கர்கள் கூட்டம் நடக்குமாம். அதில் சேகரும் கலந்து கொண்டுள்ளார்.

கப்பல் மூலம் கடத்தல்
திருடப்பட்ட சிலைகளை கப்பல் மூலமாக கடத்துவார்களாம். வெளிநாடுகளில் இந்த சிலைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் கோடிக்கணக்கில் இதில் பணம் புரளுகிறதாம்.

10 பேர் கும்பல்
தற்போது பிடிபட்டுள்ளவர்கள், சிலைகளைத் திருடுபவர்கள் அல்ல. அந்தக் கும்பலில் 10 பேர் உள்ளனராம். அவர்களில் யாரும் இன்னும் பிடிபடவில்லை. அவர்களைப் பிடிக்க தீவிர வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications