Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்குண்ணே.. வடிவேலு சொன்ன பதில்! பிரஸ் மீட்டில் வகுறு முட்டுதுனு கலாய்!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: நடிகர் போண்டா மணிக்கு உதவுவீர்களா என்ற கேள்விக்கு வைகை புயல் வடிவேலு பதிலளித்துள்ளார். அது போல் தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்கு என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடிகர் வடிவேல் வந்திருந்தார். அப்போது அவர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பின்னாடி நின்றிருந்தவர்களை சற்று கேப் விட்டு நிற்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது உடனே யாரும் எதிர்பார்க்காமல் இருந்த போது பூரா வகுறு இடிக்குதுனு கலாய்த்தார். அப்போது அவரிடம் என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள் என கேட்டனர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

அதற்கு அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2, விஜய் சேதுபதியும் நானும் நடிக்கிறோம். இப்படி படங்கள் போய் கொண்டே இருக்கின்றன. முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்து வருகிறது என்றார். அப்போது அவரிடம் நடிகை போண்டா மணி கிட்னி பெயிலியரால் உதவி கேட்டுள்ளார், நீங்கள் செய்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர்.

வடிவேல்

வடிவேல்

அதற்கு வடிவேல் ஆமா செய்யணும், நல்ல பையன் என்றார். உடனே செய்தியாளர்கள் எந்த மாதிரியான உதவி செய்ய போறீங்க என கேட்டனர் அதற்கு பதில் சொல்லலை. உங்கள் கூட்டணியில் போண்டா மணி இருந்தாரே என ஒரு நிருபர் கேட்டதற்கு வடிவேல் காமெடியாக, என்னா கூட்டணி நாங்கள் என்ன அரசியல் கூட்டணியிலா இருந்தோம் என்றார்.

அரசியல்

அரசியல்

இதையடுத்து நீங்கள் எப்போது அரசியலுக்கு வர போறீங்கன்னு கேட்டனர். அதற்கு அவர் நம்ம சினிமாவில் நடித்துவிட்டு மக்களை சந்தோஷப்படுத்திவிட்டு போவோம் என்றார். மேலும் தமிழகத்தில் ஆட்சி எப்படி உள்ளது என கேட்டதற்கு நன்றாக இருக்கிறது என்றார். பின்னர் கோயிலுக்கு வந்த மக்களுடன் சிறிது பேசிவிட்டு சென்றார்.

போண்டா மணி

போண்டா மணி

நடிகர் போண்டா மணி, விவேக் சார் இருந்திருந்தா என்னை இப்படி விட்டிருக்க மாட்டார். ஆனால் வடிவேல் சார் எனக்கு போன் செய்து கூட பேசலை என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். போண்டா மணிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. உயிர் பிழைப்பதற்கு அவருக்கு டயாலிசிஸும் சிறுநீரக அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதற்குத்தான் போண்டா மணி பண உதவி கேட்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+