விருதுநகர் திமுக வேட்பாளருக்கும் மகிந்த ராஜபக்சேவுக்கும் தொடர்பு: வைகோ குற்றச்சாட்டு
சாத்தூர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரத்தினவேலுக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருப்பதாக அத்தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தூர் சுற்றுவட்டாரத்தில் முக்குருனந்தல் என்ற இடத்தில் வைகோ பேசியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்ட செய்தி:

திமுக வேட்பாளர் ரத்தினவேலுவுக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் இடையே கடந்த ஓராண்டாக தொடர்பு இருக்கிறது. ராஜபக்சேவுடன் விருந்து உண்டு மகிழ்ந்திருக்கிறார் ரத்தினவேலு. இதற்கு முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்தான் இடைத்தரகராக இருந்தார். இந்த இடைத்தரகு வேலையை திமுக தலைவர் கருணாநிதியும் ஆதரித்தார்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் நரேந்திர மோடி பிரதமராவார். அப்போது இந்த தொடர்புகள் குறித்து விசாரித்து அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு வைகோ கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications