போகப் போகத் தெரியும்: சூசகமாகக் கூறும் வைகோ
சென்னை: தேமுதிக, த.மா.கா. ஆகிய கட்சிகள் கூட்டு இயக்கத்தில் சேருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு போகப் போகத் தெரியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பது, கூட்டு இயக்கத்தை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் நலனைக் காக்க பாடுபடும் கூட்டு இயக்கம் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் மக்கள் விரும்பி கலந்து கொள்கிறார்கள். மக்களுக்கு கூட்டு இயக்கத்தை பிடித்துள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்றார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: கூட்டு இயக்கத்தின் தலைவர் யார்?
பதில்: கூட்டு இயக்கத்தில் இருக்கும் அனைவரும் தலைவர்கள் தான்.
கேள்வி: கூட்டு இயக்கம் கூட்டணியாகும் என்கிறீர்கள். அப்படி என்றால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்?
பதில்: கூட்டு இயக்கம் கூட்டணியாக ஆகும்போது அது பற்றி அறிவிப்போம்.
கேள்வி: தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் உங்களின் கூட்டு இயக்கத்தில் சேருமா?
பதில்: எல்லாம் போகப் போகத் தெரியும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications