கூட்டணி கட்சியினர் போட்ட வாய்ப்பூட்டு.. அடக்க ஒடுக்கமாக மாறிய ஆக்ரோஷ வைகோ
சென்னை: சர்ச்சை பேச்சுக்களை பேசி வந்த மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தற்போது கடிவாளம் போட்ட குதிரை போல பாதையை விட்டு விலகாமல் பயணித்துக் கொண்டுள்ளார்.
மக்கள் நல கூட்டணி அமைந்த பிறகு, வைகோவை கையில் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு உத்வேகம். இந்த வீரா வேசத்தில் வார்த்தைகளை அள்ளி தெளித்து கோலம் போட்டார். அது கடைசியில் அலங்கோலமாக முடிந்தது.
பல கோடி பணம் கன்டெய்னர் லாரிகளில் ஜெயலலிதாவின் கோடநாடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

தா.பா.பதிலடி
தோழமை கட்சியை சேர்ந்த தா.பாண்டியனே, பணம் இருந்தால் வைகோவே பிடித்து கொடுக்கட்டுமே என்று பதிலடி கொடுத்தார்.

ஜாதி பேச்சு
இதேபோன்று கருணாநிதி குறித்து பேசுகையில் அவரது ஜாதியை கூறி விமர்சனம் செய்யும் அளவுக்கு, வாயில் வந்ததையெல்லாம் பேசினார் வைகோ.

குழப்பம்
வைகோ பேச்சுக்கு அவரது கூட்டணிக்குள் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. ஆளாளுக்கு சாடியதை பார்த்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு இருந்தது.

கொள்கை, கோட்பாடு
கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் தங்களது கொள்கைக்கு மாறாக, ஆக்ரோஷ அரசியலை வைகோ கையில் எடுப்பதை ரசிக்கவில்லை. பதவிக்காக கம்யூனிஸ்டுகளும், வி.சிறுத்தையும் கொள்கைகளை விட்டுக்கொடுத்து விட்டதாக விமர்சனம் வரும் என்று அக்கட்சியினர் அச்சப்பட்டனர்.

வாய்ப்பூட்டு
இதையடுத்து வைகோவுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. இதை தமிழ் மாநில காங்கிரஸ் தங்கள் கூட்டணியில் இணைந்தபோது, வைகோவே சுட்டிக்காட்டி பேசினார். தனக்கு அப்படி ஏதும் வாய்ப்பூட்டு போடவில்லை என்று அவரே கூறினார்.

அளவோடு விமர்சனம்
ஆனால், வைகோவின் பரபரப்பு இப்போது அடங்கியுள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் திமுக, அதிமுகவை விமர்சனம் செய்வதோடு வைகோ நிறுத்திக்கொண்டுள்ளார்.

பிரசாரம்
வைகோ மதிமுக வேட்பாளர்களையும், தேமுதிக-தமாகா-மக்கள் நல கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் முதல் கட்ட பிரசாரத்தை கடந்த 16ம் தேதி தொடங்கி நிறைவு செய்துள்ளார்.

இன்று வேட்புமனு
2ம் கட்டமாக நேற்று முதல் 30ம் தேதி வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவில்பட்டி, விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். நாளை காலையில் கோவில்பட்டியில் வைகோ வேட்புமனு தாக்கல் செய்கிறார். இருப்பினும் இதுவரை விமர்சனத்தை எதிர்கொள்ளும் வகையில் அவர் பேசவில்லை என்பது மக்கள் நல கூட்டணிக்கு ஆறுதல்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications