முடங்கிய சென்னை-திருச்சி நெடுஞ்சாலை.. 2 கிமீக்கு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்! பரனூர் டோலில் அடிதடி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட அடிதடியால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து தினமும் பல லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தான் இன்று சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பாலு என்பவர் இன்று மாலை வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பாலு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

பரனூர் சுங்கச்சாவடியை வாகனம் அடைந்தது. அந்த சமயத்தில் பாஸ்ட் டேக் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பாலுவுடன் வந்தவர்கள் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
‛இன்று பிரசாரத்திற்கு கிளம்புறேன்’.. மோதலுக்கு நடுவே ஸ்டாலின் கூறியதும் ‛பெஸ்ட் ஆப் லக்’ சொன்ன ஆளுநர்
இதில் பாலுவுடன் வந்த முருகன் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலு, அவருடன் வந்தவர்கள் மற்றும் பிற வாகனங்களில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பரனூர் சுங்கச்சாவடி வழியாக வாகனங்களின் இயக்கம் என்பது முடங்கியது. இதனால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நின்றன. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பாலு மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தர்மபுரி பாமக வேட்பாளர் மாற்றம் ஏன்? அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா வெல்வாரா? பின்னணி
சம்பவம் தொடர்பாக காவல் நிலையம் வந்து புகாரளியுங்கள். மறியலால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி சிசிடிவி கேமரா ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு வாகனங்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கின. இந்த சம்பவம் பரனூர் சுங்கச்சாவடியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications