வெள்ளம் வடிந்தது: சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
சென்னை: செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.
கனமழையால் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதையடுத்து செம்பரபாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அதனால் ஏரியின் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அடையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடையாற்றிலும் வெள்ளம் குறைந்துள்ளது. இதனால் மறைமலை அடிகள் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது. ஏரியின் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீராணம், மதுராந்தகம் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications