ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை.. அச்சமின்றி புகார் அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன், அச்சமின்ற பிரமாண வாக்குமூலம் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முன் வர வேண்டும் என்று வலியுறுத்த
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கலைக்க போலீசார், மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் போலீசாரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.

ஆணையம் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி
அதன்படி, விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணை ஆணையம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து மதுரை சேலம், கோவை உள்ளிட்ட வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு சென்று ஆணையத் தலைவர் ராஜேஷ்வரன் ஆய்வு நடத்தி வந்தார்.

சென்னை மட்டும்தான்
இந்நிலையில், சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வன்முறை நடைபெற்ற இடங்களில் சென்னையில் இருந்து மட்டுமே 128 பிரமாண வாக்குமூலங்கள் வந்துள்ளன என்று கூறினார். மேலும், மற்ற மாவட்டங்களில் இருந்து யாரும் பிரமாண வாக்குமூலத்தை அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அச்சமின்றி புகார்
பாதிக்கப்பட்ட, வன்முறையை பார்த்த நபர்கள் யாராக இருந்தாலும் மனுவாகக் கொடுக்காமல் பிரமாண வாக்குமூலங்களாக அளிக்க வேண்டும். அப்போதுதான் விசாரிக்க முடியும் என்றும் ராஜேஷ்வரன் தெரிவித்தார். அனைவரும் அச்சமின்றி பிரமாண வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இறுதி அறிக்கை
பிரமாண வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பின்னர், முழுமையான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையை 3 மாத காலத்திற்குள் தமிழக அரசுக்கு விசாரணைக் குழு சமர்ப்பிக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications