முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச பிடிக்கவில்லை... விஜயகாந்த்
தமக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச பிடிக்கவில்லை என்று விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
சேலம் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசவே தமக்கு பிடிக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் நேற்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஏழைகளுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இரண்டாயிரம் பேருக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். விழாவில் பிரேமலதா, சுதீஷ் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விஜயகாந்த், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையே இல்லை. எங்கு போனாலும் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று கேட்கிறார்கள்.
உண்மையில் எனக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச விருப்பமே இல்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, சிவகாசியில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் பிரச்னை என இரண்டு முக்கிய தொழிலாளர் பிரச்னைகள் நடந்து கொண்டிருக்க அதைப் பற்றி இந்த அரசும் அதிகாரத்தில் இருப்பவர்களும் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications