உள்ளாட்சித் தேர்தல்.. பொது வார்டு பழங்குடியினருக்கு ஒதுக்கீடு.. வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்
தூத்துக்குடி: பொது பஞ்சாயத்தை பழங்குடியினருக்கான வார்டாக மாற்றம் செய்ததை எதிர்த்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது சூளை வாய்க்கால். இதற்கான பஞ்சாயத்து பதவி பொது பிரிவினருக்கு இருந்த நிலையில், தற்போது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பஞ்சாயத்தை மீண்டும் பொது பிரிவினருக்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பொதுபிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வபிரசாத், ஏரல் எஸ்ஐ சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் மாலை சூளைவாய்க்கால் சென்று பொதுபிரிவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சூளைவாய்க்கலை மீண்டும் பொது பிரிவினருக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுககு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
எனினும், இரவு சூளைவாய்க்கல் பஞ்சாயத்தை பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து பொதுபிரிவினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications