விராலிமலையில் குண்டுகளை தேடி எடுத்த போலீசாரால் பரபரப்பு - வீடியோ

விராலிமலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது விட்டுச் சென்ற வெடிகுண்டுகளை போலீசார் தேடி எடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: விராலிமலைப் பகுதிகளில் இருந்த வெடிகுண்டுகளை போலீசார் தேடிக் கண்டுபிடித்து எடுத்துச் சென்றதால் பரபரப்பு உண்டானது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள விராலிமலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு ராக்கெட் சில மாதங்களுக்கு முன்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

 Viralaimalai police identified bombs with the help of bomb squad

அப்போது வெடிக்காமல் போன குண்டுகளை ராணுவ வீரர்கள் அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு வந்த போலீசார் விராலிமலைப் பகுதி முழுவதும் தேடியலைந்து, 10க்கும் மேற்ப்பட்ட வெடிக்காத குண்டுகளை நிபுணர்களின் உதவியுடன் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, வெடிகுண்டு எனத் தெரியாமல் மணப்பாறை அருகே பழைய இரும்புக்கடையில் அதை இருவர் உடைக்க முயற்சித்தபோது ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+