குப்பையில் கிடந்த கரையான் அரித்த ரூ. 1000 நோட்டுக் கட்டுக்கள்... விருதுநகரில் பரபரப்பு !
விருதுநகர்: விருதுநகர் குப்பைமேட்டில் கரையான் அரித்த நிலையில் 1000 ரூபாய் நோட்டுக்கள் நான்கு பைகளில் மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பை-பாஸ் ரோட்டில் உள்ள போலீஸ் பாலம் அருகே குப்பைமேடு ஒன்று உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த குப்பைமேட்டில் 1000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப் பட்டு கிடந்ததாகவும், அதனை 4 பேர் எடுத்துச் சென்றதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் ரூரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் நடத்திய ரகசிய விசாரணையில், குப்பையில் கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்ற நபர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்த 1000 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய பைகளும் மீட்கப் பட்டன.
ஆனால், அவற்றில் இருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் கரையான் அரித்த நிலையில், உபயோகப்படுத்த இயலாத நிலையில் இருந்தன. மீட்கப்பட்ட பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால், கரையான் அரித்த ரூபாய் என்பதால், அதன் மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையே, குப்பை மேட்டில் நான்கு பைகளில் மட்டுமில்லாது மேலும் அதிக பைகளில் பணம் வீசப்பட்டுக் கிடந்ததாகவும், அதனை பலர் எடுத்துச் சென்றதாகவும் தகவல் பரவியது.
எனவே, இவ்வளவு பணத்தைப் போட்டுச் சென்ற மர்மநபர் யார் ? இந்தப் பணத்தைக் கரையான் அரித்தது எப்படி ? எதற்காக அவற்றை குப்பையில் கொட்டினர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications