தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர தொண்டர்கள் பாடுபட வேண்டும்: நக்மா
சென்னை: தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை நக்மா. தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று வருகை தந்தார். அங்கு மகளிர் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன் உதாரணமாக காமராஜர் ஆட்சி இருந்தது. அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு கக்கன் போன்றோர் உதாரணமாக இருந்தனர். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின்சாரம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் திண்டாடி வருகின்றனர். வளர்ச்சி, வேலைவாய்ப்பை பெருக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தசரா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவது பெருமையளிக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மதுக்கடைகளால் சமூகத்தில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நிறைய மதிப்புள்ளது. அதே சமயம் தமிழகத்தில் மதுவால் ஆண்கள் பலர் உயிரிழப்பதால் பெண்கள் விதவையாகி வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும். வளர்ச்சி மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications