மேட்டூர் அணை நீர் மட்டம் 55.89 அடியாக உயர்வு: ஒகேனக்கல் அருவியில் வெள்ளம்
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 9 அடி உயர்ந்துள்ளது. அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. கபிணி அணை நிரம்பி வழிகிறது இதனை அடுத்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 3 நாட்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 8 அடி உயர்ந்து தற்போதிய நிலவரப்படி 56 அடியாக உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக காவிரி பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வினாடிக்கு 23,000 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணை விரைவில் நிரம்பும்
மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 21.72 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 800 கன அடியாகவும் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கல் அருவியில் வெள்ளம்
கபிணி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளமாக கொட்டுவதால் 4வது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

பரிசலுக்குத் தடை
ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக இருந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரிக்கும்
நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. எனவே, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.
பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், பரிசல் ஓட்டிகளும் பரிசல்களை இயக்கவில்லை.

வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல் அருகேயுள்ள காமராஜ் நகர், ஊட்டமலை உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நான்காவது நாளாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications