வெறுங்கையோடு போனதால் விரட்டப்பட்ட அமைச்சர்கள் இன்று நிவாரணப் பொருட்களுடன் ஆர்.கே.நகரில்...
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரில் வெறுங்கையோடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச் சென்றதால் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேற்று விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் மக்களின் கோபத்தை தணிக்க இன்று அதே பகுதிக்கு ஏராளமான நிவாரணப் பொருட்களுடன் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.

சென்னையில் வெள்ளம் மிக மோசமான பாதித்த பகுதிகளில் வடசென்னையின் ஆர்.கே.நகரும் ஒன்று. இப்பகுதியில் பல அடி உயரத்துக்கு வெள்ளநீர் தேங்கியிருந்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் இப்பகுதியில் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ ஆகிய 3 அமைச்சர்கள் நேற்று பார்வையிட வந்தனர். ஆனால் பெருங்கோபத்தில் இருந்த மக்கள் அமைச்சர்களை மடக்கி மிகக் கடுமையான கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உச்சகட்டமாக அப்பகுதியைச் சேர்ந்த வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளரான வெற்றிவேலுக்கு சரமாரி அடியும் விழுந்தது. பொதுமக்கள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வெள்ளநீரில் நடக்குமாறு நிர்பந்தித்தனர்.

ஒருகட்டத்தில் என்னால் முடியாது என்று கூறிவிட்டு சக அமைச்சர்களுடன் நத்தம் விஸ்வநாதன், பொதுமக்களின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிவந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் வண்டி நிறைய வெள்ள நிவாரணப் பொருட்களுடன் அதே ஆர்.கே.நகர் பகுதிக்கு அமைச்சர்கள் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்றனர். இருப்பினும் எல்லாவற்றையும் இழந்த மக்கள் குமுறலோடுதான் நிவாரணப் பொருட்களை வாங்கி சென்றனர்.

இதேபோல் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் திருவொற்றியூர் பகுதியில் நிவாரண உதவிகளை இன்று வழங்கினார்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications