நெல்லையில் இடிந்து விழுந்த குடிநீர் தொட்டி... அச்சத்தில் ஓடிய கிராமமக்கள்
நெல்லையில் மணல் விளை கிராமத்தில் தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்தது.
நெல்லை: நெல்லையில் குடிநீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்ததால் பொது மக்கள் பதறிய ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கந்தாண்பாறை அருகே மணல்விளை கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பஞ்சாயத்து சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளாக போராடி வந்ததால் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த தொட்டி கட்டி ஆண்டு 2007 என்று கூறுகின்றனர்.
இந்த தொட்டி சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த தொட்டியில் இருந்து தான் இந்த கிராமத்திற்கும் சுற்று புற கிராமத்திற்கும் குடிநீர் வினியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொட்டி கான்கீரிட் பெயர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை.
தொட்டி பலமில்லாமல் காணப்பட்டதால் பொது மக்கள் அதன் அருகே செல்லவே பயப்பட்டு வந்தனர். இந்நிலையில் இரவு திடீரென தொட்டியில் நீர் நிரம்பியதால் பாரம் தாங்காமல் பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தூரமாக ஓட்டம் பிடித்தனர். இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தொட்டியில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஆறாக பெருக்கெடித்து ஓடியது. இந்த தகவலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் வந்து பார்க்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்கள் கூறுகையில் தொட்டி உடைந்து விட்டதால் இனி குடிநீருக்காக பக்கத்து ஊருக்கு தான் போக வேண்டும் என வேதனைப்பட்டனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications