சசிகலாவின் "வேற" மாதிரி போராட்டம் என்னவாக இருக்கும்?.. பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!
சசிகலா அறிவித்துள்ள வேற மாதிரி போராட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
சென்னை: இன்று வரை நாம் பொறுமையாக இருந்தோம். நாளை முதல் வேறு மாதிரி போராடுவோம் என்று நேற்று கூறியிருந்தார் சசிகலா. இந்த நிலையில் அவரது வேறு மாதிரி போராட்டம் என்னவாக இருக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.
நேற்று சற்றே தனது கோபத்தை தனது வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தினார் சசிகலா. போயஸ் தோட்டத்தில் கூடிய தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசும்போது, நாம் ஓரளவுக்கு மேல் பொறுமை காக்க முடியாது. செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், நாம் இன்று வரை பொறுமையாக இருந்தோம். நாளை முதல் வேறு மாதிரி போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கள் பெருத்த சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையிலானது என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது. ஆனால் தனது பேச்சு குறித்து இதுவரை சசிகலா விளக்கம் ஏதும் தரவில்லை.
இந்த நிலையில் அவர் என்ன மாதிரியான போராட்டத்தில் அடுத்து ஈடுபடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. அவர் என்ன செய்யப் போகிறார், அவரது பேச்சின் உள் அர்த்தம் என்ன என்ற விவாதமும் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது. கீழ்க்காணும் முடிவுகளில் ஒன்றை சசிகலா எடுக்கலாம் என்ற ஊகமும் கச்சைக் கட்டிப் பிறக்கிறது.
ஜெயலலிதா சமாதியில் போய் உண்ணாவிரதம் இருக்கலாம்
ஆதரவு எம்.எல்.ஏக்களோடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடலாம்
டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடலாம்
நீதிமன்றத்தில் ஆளுநரின் அமைதிக்கு எதிராக வழக்குப் போட முயற்சிக்கலாம்
இதெல்லாம் அமைதியான முறையிலான நடவடிக்கைகள். இதில் எதையாவது சசிகலா செய்யப் போகிறாரா என்று தெரியவில்லை. அதேசமயம், இதைத் தாண்டி அவர் என்ன மாதிரியான போராட்டத்தில் ஈடுபடப் போகிறார் என்பது சத்தியமாக யாருக்குமே புரியவில்லை. அதையும் சசிகலாவே சொன்னால்தான் உண்டு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications