மழை வருது.. வாளியை எடு.. தண்ணியைப் பிடி.. இது சென்னை 'இன்டர்நேஷனல்' ஏர்போர்ட்!
சென்னை: வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட ஆரம்பித்து விடுகிறார்களாம் சென்னை விமான நிலைய ஊழியர்கள். எதற்கு பிளாஸ்டிக் வாளி எனக் கேட்கிறீர்களா...? வேறு எதற்கு மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகும் இடங்களில் வைப்பதற்குத் தான்.
குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்.
சமீபத்தில் விஸ்தீகரிக்கப் பட்ட சென்னை விமான நிலையத்தில் தான், மழை நீர் ஒழுகாமல் இருக்க வாளிகள் வைக்கப் பட்ட அவலகாட்சியைக் காண முடிந்தது.

ஒழுகும் விமானநிலையம்...
சரியான கட்டுமானம் இல்லாததால் சமீபத்தில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையக் கூரைகள் இடிந்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேற்கூரையில் உள்ள இடைவெளியின் காரணமாக மழை பெய்தால், ஆங்காங்கே ஒழுகுகிறதாம் சென்னை விமான நிலையம்.

வாளி எங்கப்பா...?
பயணிகள் கூடும் இடம், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ள இடம் ஆகிய இடங்களில் மழை நீர் ஒழுகுவதால், மழை மேகம் கூடியவுடன் முன்னெச்சரிக்கையாக மழை நீர் ஒழுகும் இடங்களில் வைக்க வாளி தேடி ஓடுகிறார்களாம் விமான நிலைய ஊழியர்கள்.

அடடா மழைடா...
கடந்த ஞாயிறன்று பெய்த அடைமழைக்கு கிட்டத்தட்ட 10 வாளிகள் வெவ்வேறு இடங்களில் வைக்கப் பட்டு, விமான நிலையத்திற்குள் தண்ணீர் சேராமல் பார்த்துக் கொண்டார்களாம்.

4000ம் பயணிகள்....
சென்னை விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 27 விமானங்களும், 4000க்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் வருத்தம்...
விமான நிலையத்தில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளும், பிளாஸ்டிக் வாளிகளும் வைக்கப் பட்டிருந்ததாகவும், ஆனபோதும் பயணிகளை சோதனை போடும் இடம் அருகே மழை நீர் தேங்கி நின்றதாகவும் ஞாயிறன்று விமானப் பயணம் மேற்கொள்ள வந்த பயணி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கவலை....
கிட்டத்தட்ட ரூ 2,015 கோடியில் அதிநவீன உபகரங்கள் கொண்டு கட்டப் பட்டவை இந்த விமான நிலைய மேற்கூரைகள். இதில் அவ்வப்போது குறைபாடுகள் ஏற்படுவது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கவலையில் மூழ்கி உள்ளனர்.

உலக அரங்கில் இந்தியா....
தற்காலிகமாக மழை நீர் ஒழுகுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், விமான நிலையம் என்பது வெறும் விமான பயணம் மேற்கொள்ளும் இடமாக மட்டும் நினைக்காமல், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் இடம் என்றும், இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் பெருமையை உலக அளவில் எவ்வாறு எடுத்துக் காட்டும் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications