'வேதா' இல்லத்தை இப்போ யார் பத்திரமாக பார்த்துக்கிறாங்க தெரியுமா...?
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை இளவரசியின் 2 மகள்கள் தான் பார்த்துக் கொள்கிறார்களாம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
அவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஜெயலலிதா
சிறையில் உள்ள ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை இளவரசியின் மகன் ஜே. விவேக் மற்றும் மருமகன்கள் ராஜராஜன், கார்த்திகேயன் ஆகியோர் வாங்கிக் கொடுத்து உதவியாக உள்ளார்களாம்.
போயஸ் கார்டன்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை இளவரசியின் மகள்கள் இருவரும் பார்த்துக் கொள்கிறார்களாம்.
சசிகலா
சசிகலாவின் குடும்பத்தாரான வி. திவாகரன், டி.டி.வி. தினகரன், டி.வி. மகாதேவன், டாக்டர் எஸ். வெங்கடேஷ் ஆகியோர் சசிகலா மற்றும் இளவரசியை சிறையில் சந்தித்து பேசியுள்ளனர்.
நடராஜன்
பெங்களூர் சிறைக்கு வந்த சசிகலாவின் கணவர் நடராஜனால் யாரையும் சந்திக்க முடியவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.