மகன்களுக்கு சீட் கேட்டு அடம்பிடிக்கும் காங். சீனியர்கள்...8 தொகுதி வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் காங்கிரஸ் தத்தளித்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மகன்களுக்கு சீட் தர வேண்டும் என்ற அடம்பிடித்துக் கொண்டிருப்பதால் இழுபறி நீடிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டனர்.
இதன்பின்னர் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளிவந்துவிடும்.. இன்று மாலை வெளியாகிவிடும் என்று நாள்தோறும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் வேட்பாளர் பட்டியல்தான் வரவில்லை. இதற்கு காரணமே எஞ்சிய தொகுதிகளுக்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முட்டி மோதுவதால்தானாம்.

3 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட்
தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.க்களான விஜயதாரணி, கோபிநாத் மற்றும் பிரின்ஸ் ஆகியோருக்கு விளவங்கோடு, குளச்சல் மற்றும் ஓசூர் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2011 தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வென்ற போது 2 எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.வாசனுடன் தமிழ் மாநில காங்கிரஸுக்கு தாவிவிட்டனர்.

திருநாவுக்கரசர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மகன்களுக்கு சீட் கேட்டு போராடி வருகின்றனர். இவர்களில் முதலில் வென்றது திருநாவுக்கரசர்தான். ஒருவழியாக அறந்தாங்கி தொகுதியில் மகன் எஸ்.டி. ராமச்சந்திரனை வேட்பாளராக்கிவிட்டார்.

தங்கபாலு
இதேபோல் மயிலாப்பூர் தொகுதியை மகனுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதில் மிக தீவிரமான லாபியில் இருக்கிறார் முன்னாள் காங். தலைவர் கே.வி. தங்கபாலு. கடந்த 2011 தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியை மனைவி ஜெயந்திக்கு வாங்கிக் கொடுத்தார் தங்கபாலு. அத்துடன் தங்கபாலு டம்மி வேட்பாளராகவும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
திடீரென ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடியாக அதிரடியாக தங்கபாலுவே வேட்பாளரான பெரும் கூத்து நடந்தேறியது நினைவிருக்கலாம்.

கிருஷ்ணசாமி, நாசே
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி செய்யாறு தொகுதியை மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத்துக்கு எப்படியும் வாங்கிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
மதுரவாயல் தொகுதியில் மகனை வேட்பாளராக்குவதற்காக தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் ஒருபக்கம் லாபியில் இறங்கியுள்ளார்.
இந்த களேபரங்களால்தான் காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் பெரும் இழுபறி நீடிக்கிறதாம்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications