சசிகலாவை முதல்வராக்க அமைச்சர்கள் படுமும்முரம்- அதிமுக தொண்டர்கள் 'ஷாக்'
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை வீழ்த்தி விட்டு தற்போது சசிகலாவை முதல்வராக பல அமைச்சர்கள் முயற்சி செய்து வருவது அதிமுகவில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென்று அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் அவர் பதவி ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி வருகிறார்.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் தவறேதும் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஓபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தை பொங்கலில் பதவியேற்பு ?
கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றுதான் தற்போது மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அந்தத் தீர்மான நகலுடன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை வழங்கி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக மட்டுமின்றி, தமிழக முதல்வராகவும் சசிகலா வருகிற தைப் பொங்கலுக்குப் பிறகு பதவியேற்கலாம் எனத் தெரிய வருகிறது.

ஜெயலலிதா சமாதியில் தீர்மானம்
இந்நிலையில், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இன்று பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். அங்கு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பதுடன் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்போது அதில் போட்டியிட்டு சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தியாகத்தின் வடிவம்
புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் சின்ன அம்மா சசிகலா. அவர் தியாகத்தின் வடிவமாக திகழ்ந்து வருகிறார். 1 கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சசிகலா விளங்குகிறார். அவர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் காட்டும் வழியில் விசுவாசத்துடன் அரசியல் பயணம் தொடருவோம்.

ஆட்சியை வழி நடத்த வேண்டும்
சின்ன அம்மா அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி சின்ன அம்மா சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று முதல்வராகவும் ஆக வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

ஒத்துழையாமை இயக்கம்
கங்கா சந்திரமுகி அறைக்கு போனா.... சந்திரமுகியா நின்னா... நடந்தா... இப்போ முழுசா சந்திரமுகியா மாறிட்டா... புரிஞ்சவன் பிஸ்தா... இதுதான் இப்போது வாட்ஸ் அப்பில் வைரல் ஆகிறது. போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்த வி.கே. சசிகலா, அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர விரும்பினார். அது மட்டும் போதுமா? தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் நன்றாக இருக்குமே என்று யார் சொன்னார்களோ இப்போது ஓபிஎஸ்க்கு எதிராக சில அமைச்சர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டனர். இது அதிமுவிற்கு நல்லதா? கெட்டதா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications