ஆக.2-ல் கச்சத்தீவில் தஞ்சமடைந்து இலங்கையிடம் சரணடையும் போராட்டம்- ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!
ராமேஸ்வரம்: இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆகஸ்ட் 2-ந் தேதியன்று இலங்கையிடம் சரணடையும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வருகின்றது. 45 நாள் தடைகாலம் முடிந்து சென்ற மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்களை மட்டும் விடுதலை செய்ததுடன் படகுகளை விடுதலை செய்ய மறுத்துவிட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிசிடமும் தமிழக மீனவர்களை கைது செய்யக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 21ந் திகதி இராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 38 பேரையும் 9 விசைப்படகுகளுடன் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கையில் உள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
மேலும் 28ந் திகதி தங்களின் படகுகளின் உரிமங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதுடன் ஆகஸ்ட் 2ம் தேதி படகுகளில் வெள்ளை கொடி பறக்கவிட்டு கச்சத்தீவு சென்று தஞ்சமடைவதும் என்று தீர்மானித்துள்ளனர்.
அப்படி கச்சத்தீவில் தஞ்சமடையும் போது இலங்கை கடற்படையிடம் சரணடைந்து அங்கேயே அமைதியான வாழ்க்கை வாழ்வோம் என்றும் மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications