யாருடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை, கூட்டணி முடிவாகவில்லை.. விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: திமுகவுடன் தேமுதிக கூட்டணியை இறுதி செய்து விட்டதாக வெளியான தகவலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுத்துள்ளார்.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதியாகி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தேமுதிகவுக்கு 59 சீட் தர திமுக ஒப்புக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இதை இரு தரப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதேசமயம், வதந்தி கிளப்பி வருவதாக மக்கள் நலக் கூட்டணியின் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மறுபக்கம் பாஜக, தேமுதிகவுக்காக இன்னும் முயற்சித்து வருவதாக தெரிகிறது. தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பேச இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் சென்னை வந்திருந்தார். அவர் பிரேமலதாவைச் சந்தித்துப் பேசினார்.
சிலநாட்களுக்கு முன்பு சென்னை வந்து விஜயகாந்த்தை அவரது வீட்டில் வைத்துச் சந்தித்தார் பிரகாஷ். அப்போது ஜவடேகரிடம், பாஜக தலைமை தன்னை சற்றும் மதிப்பதில்லை என்று புலம்பித் தள்ளி விட்டார் விஜயகாந்த் என்று கூறப்பட்டது. மேலும் அந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்துப் பேசவில்லை என்றும் தேமுதிக கூறி பாஜகவை டென்ஷனாக்கியது.

இந்த நிலையில் மீண்டும் இன்று வந்து விஜயகாந்த்தை அவர் சந்திப்பார் என்று கூறப்பட்டது. வந்து விட்டார் என்று கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாகவே விஜயகாந்த் ரிஷிவந்தியம் புறப்பட்டுப் போய் விட்டார்.
இந்த நிலையில் திருக்கோவிலூரில்நடந்த கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.அங்கு அவர்கட்சியினர் மத்தியில் பேசுகையில், இதுவரை கூட்டணி தொடர்பாக யாருடனும் நான் பேசவில்லை. சில கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை. நடந்தால் உங்களிடம் தெரிவிப்பேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications