ஒயின்ஷாப் அதிபர் நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
சென்னை : திருநெல்வேலி பகுதியில் ஒயின்ஷாப் நடத்தி வந்தவரும் சென்னையை சேர்ந்த தொழிலதிபருமான துரைப்பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சி.என்.கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மகன் துரைப்பாண்டியன், பிரபல தொழிலதிபர். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இவருடைய மனைவி அம்சர். இவர்களுக்கு பாலமுருகன், முத்துபாண்டியன் ஆகிய இரண்டு மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் டாக்டருக்கு படித்து வருகின்றனர்.

துரைப்பாண்டியன் சென்னையில் வசித்து வந்தாலும் அடிக்கடி சொந்த ஊரான நெல்லைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வந்த துரைப்பாண்டியன் நேற்று தனது வீட்டில் இருந்த போது திடீரென்று கைத்துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் ஓடி வந்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் துரைப்பாண்டியன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டியன் உயிரிழந்தார்.
துரைப்பாண்டியன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை சந்திப்பு பகுதியில் உதயம் என்ற பெயரில் ஒயின்ஷாப் நடத்தி வந்தார். இதனால் அவரை உதயம் துரைப்பாண்டியன் என்றும் கூறுவர். துரைப்பாண்டியன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் துரைப்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருக்கு வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என்றும் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications