சென்னை கட்டட விபத்து: ஒரு பெண் உயிருடன் மீட்பு– பில்டர் உள்பட 4 பேர் கைது
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்தில் இன்று ஒரு பெண் தொழிலாளர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்ச அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த இந்த பெரும் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டோரை மீட்க தீவிர நடவடிக்ககள் முடுக்கி விடப்பட்டன.

அரக்கோணத்திலிருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை மீட்பு குழுவினர் மீட்டனர். உடனடியாக அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்று முதல் 20 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பில்டர்கள் - பொறியாளர்கள் கைது
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவன இயக்குநர்கள் 2 பேர் மற்றும் கட்டட பொறியாளர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ப்ரைம் சிருஸ்டி நிறுவனத்தின் இயக்குநர்களான முத்து, மனோகரன் மற்றும் பொறியாளர்கள் சங்கர், துரைசிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications